மேல் மாகாணத்தில் உணவுக் கழிவுகள் 40 வீதத்தால் குறைந்துள்ளது!

Date:

மேல் மாகாணத்தில் நாளாந்தம் வெளியேற்றப்படும் சமைத்த உணவின் அளவு சுமார் 40 வீதத்தால் குறைந்துள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுநோய்க்கு முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது, ​​இக்காலப்பகுதியில் வெளியேற்றப்படும் ஏனைய கழிவுகளும் சுமார் 20 வீதத்தால் குறைந்துள்ளது.

பிளாஸ்டிக் பொலித்தீன் உள்ளிட்டவற்றை கழிவுகளாக மறுசுழற்சி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களை அகற்றுவதில்  பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதாக மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையின் பணிப்பாளர் நளின் மன்னப்பெரும  தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...