விமல் வீரவன்சவுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு

Date:

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக ஐக்கிய இளைஞர் சக்தி, குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

வீரவன்ச எழுதி வெளியிட்டுள்ள ‘நவய செங்கவுனு கதாவ’ என்ற நூல் காரணமாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடந்த போது இராணுவத்தின் நிலைப்பாடு சம்பந்தமாக வீரவன்ச, பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் இராணுவம் ஜனாதிபதி உத்தரவுகளை ஏற்கவில்லை எனவும் அமெரிக்க தூதுவரின் தாளத்திற்கு ஏற்றபடி ஆடியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் ஐக்கிய இளைஞர் சக்தி குறிப்பிட்டுள்ளது.

சில இராணுவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே விமல் வீரவன்சவின் நூலுக்கு பின்னால் இருக்கும் நோக்கம் எனவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...