இன்று முதல் உலக குடியேற்ற வாரம் அறிவிப்பு

Date:

உலக குடியேற்ற தினத்தை முன்னிட்டு இன்று (02) முதல் குடியேற்ற வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“பாதுகாப்பான நகர்ப்புற பொருளாதாரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருடம் உலக குடியேற்ற தினம் கொண்டாடப்படவுள்ளதாகவும், பல வேலைத்திட்டங்களை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி குடியேற்ற வாரமாக அறிவிக்கப்பட்டு அந்த வாரத்தில் 500 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்லாமல், மாவட்ட அளவில் வீட்டு உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தையும் அமுல்படுத்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த உரிமைப் பத்திரங்களை வழங்கும் வேலைத்திட்டத்தை அடுத்த ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யுமாறு விடயத்திற்கான அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...