பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Date:

நேற்று டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 5 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையினை அதிகரித்தது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...