சட்டத்தரணிகள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அதிருப்தி!

Date:

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது கடமைகளை நிறைவேற்றும் போது சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுவது குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது.

உயிருக்கு அஞ்சாமல் தமது தொழில்சார் கடமைகளை நிறைவேற்றும் சுதந்திரம் சட்டத்தரணிகளுக்கு இருக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி கலகெதர நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் ஒருவரால் பெண் சட்டத்தரணி ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கலகெதர நீதிமன்ற அமர்வில் இருக்கும் போது பெண் சட்டத்தரணி ஒருவரின் பாதுகாப்பு சவால் செய்யப்பட்ட சம்பவத்தை சங்கம் தீவிரமாக கவனத்திற்க் கொள்கிறது என கௌசல்யா நவரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பல சட்டத்தரணிகள் ஆஜராகி நீதி வழங்கப்படுவதை உறுதிப்படுத்த பெண் சட்டத்தரணிக்கு உதவியதாக அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, உறுப்பினர்களின் உரிமைகள் குறிப்பாக அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஏனைய விடயங்களில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் இன்றியமையாதது என வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் கண்ணியம் மற்றும் அதிகாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...