2024 ஆம் ஆண்டுக்கான ‘பட்ஜெட்’ எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில்!

Date:

2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்) எதிர்வரும் திங்கட்கிழமை (நவம்பர் 13) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூடிய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...