நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் போக்குவரத்து நடவடிக்கை பாதிப்பு

Date:

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு வீதிகளின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்தமையால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மாத்தளை உக்குவெல – பண்டாரபொல வீதி, பல்லேபொல – கொஹொல்லன்வல வீதி ஆகியவற்றின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும், லக்கல – ரிவஸ்டன் வீதி ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...