ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் இலாபத்தை தேட வேண்டாம்: கத்தோலிக்க திருச்சபை

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்  பிரதான குற்றவாளி தொடர்பில் அவசர அவசரமாக அறிக்கைகளை வெளியிட்டு அரசியல் இலாபத்தை எதிர்பார்க்கிறாரா? என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வைத்து அரசியல் இலாபத்தை தேட வேண்டாம் என கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் அப்படிப்பட்ட மாயையில் மக்கள் விழ மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 90 வீதத்துக்கும் அதிகமாக நிறைவடைந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன கூறிய தகவல்கள் அவற்றில் வெளியாகியுள்ளனவா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்றைய தினம் அழைக்கப்பட்ட நிலையில் தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களின் பின்னர் தற்போது அவர் இவ்வாறு தெரிவிப்பது நாட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...