உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்: மெதகம தம்மானந்த தேரர்!

Date:

உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக தமது பீடத்தினருடன் விரிவாக ஆராய்ந்த பின்னரே தமது கருத்துக்களை வெளியிட முடியுமென அஸ்கிரிய பீடம் தெரிவித்துள்ளது.

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பான இடைக்கால செயலகத்தினால் கடந்த மாதம் உத்தேச உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தின் பிரதிகள் அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்களிடம் கையளிக்கப்பட்டன.

அதனையடுத்து அவ்விரு பீடங்களும் இணைந்து அச்சட்டமூலத்தை ஆராய்ந்து, தமது நிலைப்பாடுகளை அறியத்தருவதாக மல்வத்துபீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரியபீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோர் உறுதியளித்தனர்.

அதனடிப்படையில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அஸ்கிரிய மகாவிகாரை சங்க சபையின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர், இந்த உத்தேச சட்டமூலமானது நல்லிணக்கப்பொறிமுறையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...