வரலாற்றில் முதன் முறையாக பிரிட்டன் பாராளுமன்றத்தில் இலங்கை வம்சாவளி பெண் உமா குமரன்

Date:

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ பாராளுமன்ற தொகுதியில் இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.

இவர் தொழில் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தொழில் கட்சி பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சி அமைக்கிறது. அவர் போட்டியிட்ட தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

அதில் 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்தவர் உமா குமரன். இவரது பெற்றோர் இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டனில் அவர்கள் குடியேறி உள்ளனர்.

அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.

தொழிலாளர் கட்சியின் உறுப்பினரான உமா குமரன் 19,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தனது எதிர் வேட்பாளரை தோற்கடித்தார்.

14 மாதங்கள் தேசிய சுகாதார சேவையின் நிபுணர்களுக்காகப் பணிபுரிந்த உமா குமரன், தொழிற்கட்சி எம்பி டான் பட்லரின் பாராளுமன்ற ஆராய்ச்சியாளராகவும், சட்டத்தரணியாகவும் இருந்துள்ளார்.

மேலும் அவர் 2010 இல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டார். 18 மாதங்களுக்கும் மேலாக தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராகவும் அவர் இருந்துள்ளார்.

“ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் மரியாதை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி.

நான் எப்போதும் உங்கள் குரலாகவும் உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன்,” என்று அவர் தனது வெற்றிக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...