காசாவில் ஐ.நா நடத்தி வந்த பாடசாலை மீது குண்டு வீச்சு: நாளுக்கு நாள் உக்கிரமாகும் இஸ்ரேல் தாக்குதல்!

Date:

காசவில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலையொன்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய காசாவின் நுசெய்ரட் அகதி முகாமில் இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சமடைந்திருந்த கட்டடத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

புழுதியும் இடிபாடுகளும் நிறைந்து காணப்படும் புகைமண்டலம் நிறைந்த வீதியில் பொதுமக்கள் அலறுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

மும்முரமான சந்தைக்கு அருகிலிருந்த கட்டிடத்தின் மேல் தளம் இலக்குவைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

7000 பேர் அந்த கட்டிடத்தில் அடைக்கலமடைந்திருந்தனர் என பிபிசி தெரிவித்துள்ளது.

குர்ஆன் ஒதிக்கொண்டிருந்தவேளை  சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என பெண்ணொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் இந்த பாடசாலையை முன்னெச்சரிக்கையின்றி இலக்குவைப்பது இது நான்காவது தடவை என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதலால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பத்திரிகையாளர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...