புத்தளம் பெரிய பள்ளிவாசலில் அழகிய தொனியில் (கிராத்) குர்ஆனை ஓதும் நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்!

Date:

புத்தளம் பெரிய பள்ளிவாசல் ஏற்பாடு செய்திருக்கின்ற அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுகின்ற நிகழ்ச்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி மாலை 4 மணி முதல் இரவு 10 மணிவரை முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது.

இச்சிறப்பான நிகழ்ச்சியில் சர்வதேச ரீதியில் பிரபலமான பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த அல் காரி ஹாபிஸ் கம்ருல் ஆலம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இத்தோடு அல்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுவதற்கு நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் காரிமார்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர்களுடைய அழகிய தொனியிலான கிராத் பாராயணம் முறைகளையும் அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்கள்.

மிகப்பெரிய ஒரு நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்விலே புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இயங்கிவந்த மத்ரஸா ரவ்ழதில் ஹாபிழீன் என்ற ஹிப்ழ் மத்ரஸாவை மீள ஆரம்பிக்கும் நிகழ்வும் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வு பேஸ்புக்கிலும், யூடியூபிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...