‘சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை’

Date:

சீனாவில் பரவும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ்’ (HMPV) என அழைக்கப்படும் வைரஸ்  தற்போது சீனாவில் மட்டுமே பரவுகிறது. இதுவரை இது பெரும் அச்சுறுத்தலாக கருதப்படவில்லை, ஆனால்  மேலதிக கண்காணிப்புக்குட்படுத்தப்பட வேண்டும்,” என சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் அறிகுறிகள் பெரும்பாலும் COVID-19 நோயின் அறிகுறிகளோடு ஒத்ததாக இருக்கும். இந்த வைரஸ் மற்ற நாடுகளை பாதிக்குமா அல்லது COVID-19 போன்ற தொற்றுகளை மீண்டும் உண்டாக்குமா என பற்றிய ஊகங்கள் பல உருவாகியுள்ளன.

இதே வேலை கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி,

“COVID-19 மற்றும் HMPV க்கு இடையே எவ்வித வேறுபாட்டும் இருக்காது. இதனை வைரஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும், இருப்பினும், விமான நிலையங்களில் மற்றும் பிற நுழைவுப் புள்ளிகளில் ஸ்கிரீனிங் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்த வைரஸ் புதியதல்ல என்றும், பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைராலஜி (Virology) நிபுணர் டாக்டர் ஜூத் ஜெயமஹா கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, சீனாவின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான சுவாச நோய்த்தொற்றுகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸினால் ஏற்படுகின்றன. இதே போன்று, ரைனோவைரஸ், RSV மற்றும் HMPV போன்ற வைரஸ்களும் சிறிய அளவில் காணப்படுகின்றன. இந்த வைரஸ்கள் புதியவை அல்ல, மேலும் உலகளவில் பரவ வாய்ப்பில்லை.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் கைகளைக் கழுவுதல், உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருப்பது போன்றவை பயனுள்ளதாக இருக்கும் எனவும், நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...