உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 14 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு

Date:

ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள்  இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 11 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார்.

50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் கிடைக்கப்பெறவுள்ளதாக தபால் மா அதிபர் பீ. சத்குமார கூறினார்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை  இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதற்கமைய குறித்த 18 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...