உடுநுவர, மாஹோ மற்றும் போரா சமூகத்துக்கான காதிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன

Date:

கண்டி மாவட்டத்தின் உடுநுவர, குருணாகல் மாவட்டத்தின் மாஹோ (மாஹோ, வாரியபொல, நிக்கவரட்டிய, கல்கமுவ, அம்பன்பொல, ஜாகம, பாலுகடவல, வல்பாலுவ, கனுக்கெட்டிய, அபுக்காகம மற்றும் அண்டிய பிரதேச சிறு கிராமங்கள்) மற்றும் போரா சமூகங்களுக்கான காதி நீதிபதிகளை நியமிப்பதற்கென தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.

விண்ணப்பதாரிகள் ஆணாக இருக்க வேண்டும் என்பதோடு, பல்கலைக்கழகப் பட்டதாரிகள், மௌலவிகள், அல் ஆலிம் சான்றிதழ் உள்ளவர்கள், சட்டத்தரணிகள், அரச சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் எவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளமாக 7,500 ரூபாவும் இதர செலவுகளுக்காக 6,500 ரூபாவும் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி 2025 ஜூலை 4 ஆம் திகதி, மேலதிக விபரங்கள் 2025 ஜூன் 06 ஆம் திகதிய வர்த்தமானியில்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...