செம்மணி போராட்டக்களத்திற்கு சென்ற அமைச்சர் விரட்டியடிப்பு

Date:

யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா விளக்கு“ இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

செம்மணியில் போராட்டக்களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர்.

மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர்.

இதன் பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்கபட்டார்.

இதேவேளை அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.  விரைவாக குறித்த இடத்தை விட்டு சந்திரசேகரன் வெளியேறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி காத்திருந்த நிலையில் அவரையும் சூழ்ந்து கொண்டோர் அவரையும் விரட்டியடித்தனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...