ஈரானிய தூதுவருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு: இஸ்ரேல்–ஈரான் போர் நிலவரம் குறித்து கவனம்

Date:

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நிறுத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித் ஹேரத் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

எந்தவொரு தீவிரப் போராட்டமும் இலங்கை உட்பட பிராந்தியத்திற்கும் அதற்கு அப்பாலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தூதருக்கு விளக்கியதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...