நாட்டின் பல பகுதிகளில் மேகமூட்டமான வானம்

Date:

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில பகுதிகளில் 50 மி.மீ. அளவிலான ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களில் வானம் மேகமூட்டமாக காணப்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மொணராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதல்: இலங்கையின் அறிக்கை அரசாங்கத்தின் இயலாமையைக் காட்டுகிறது- ஹக்கீம்  

கத்தார் மீதான தாக்குதல் குறித்த அறிக்கை உட்பட, இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ள...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலைய புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புனரமைப்புப் பணிகள் இன்று திங்கட்கிழமை (15)...

அவசர அரபு-இஸ்லாமிய உச்சிமாநாட்டிற்காக கத்தாரில் கூடும் தலைவர்கள்!

கத்தாா் தலைநகா் தோஹாவில் அரபு - இஸ்லாமிய தலைவர்களின் அவசர ஆலோசனைக்...

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்: கத்தார் நடத்தும் அவசர அரபு-இஸ்லாமிய உச்சி மாநாடு!

கத்தாரில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான வான் வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து  அரபுலக தலைவர்கள்...