முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமான அல்-அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற முதல் தராவிஹ் தொழுகை.

Date:

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமாகக் கருதப்படும் பலஸ்தீனத்தின் அல்-அக்ஸா பள்ளிவாசலில், ரமழான் மாதத்தின் முதல் தராவிஹ் தொழுகை நேற்று இரவு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

2026 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து,  ஜெருசலேமில் முதல் தராவிஹ் தொழுகை தொடங்கியது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் பழைய நகரம் மற்றும் பள்ளிவாசலின் நுழைவாயில்களில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டனர். குறிப்பாக, இளைஞர்கள் உள்ளே நுழைய பல இடங்களில் தடை விதிக்கப்பட்டது.

அச்சுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் மசூதி வளாகத்திலும் அதன் திறந்தவெளி முற்றங்களிலும் திரண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களுக்கு அல்-அக்ஸா பள்ளிவாலுசலுக்குள் நுழைய இஸ்ரேலிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...