உள்ளூர்

நாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த...

கொரோனா தொற்று காரணமாக மேலும் 43 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 13 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் ஆர்ப்பாட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். "ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் - மனித சுதந்திரத்தைப் பாதுகாத்திடு” எனும் கருப்பொருளில் ஐக்கிய மக்கள்...

நாட்டில் ​கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,451 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,451 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 241,035 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்திறன் ஆய்வாளருக்கு கொரோனா

இலங்கை அணியின் பயிற்சி ஊழியர்களில் மற்றொரு உறுப்பினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் விளையாட்டு செயற்திறன் ஆய்வாளர் தனுஜ நிரோஷ் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை கிரிக்கெட்...

Popular