ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்

Date:

ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலில் அதன் நிர்வாக சபை தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் செயலாளர் அப்துற்றஹ்மான் (நளீமி) அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் அவர்கள் தலைமை உரை நிகத்தினார்.
இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் நிம்ஷாத் ஒன்றுகூடலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார். அஹதிய்யா பாடசாலைகளை மஸ்ஜித்களில் ஆரம்பித்தல், பதிவு செய்யப்படாத மஸ்ஜித் நிருவாகிகளை பதிவு செய்தல், பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளல் போன்ற விடயங்களை அவர் தெளிவு படுத்தினார்.
குறித்த கூட்டத்தில் ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஹொரவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஹாசில் 

Popular

More like this
Related

இந்த ஆண்டில் இதுவரை 1.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை!

இந்த ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரி சதக்கத்துல்லா மறைவு!

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) மேனாள் அதிகாரியும், பொருளாதார வல்லுநருமான முனைவர்...

இலங்கையில் 83,000 ஐக் கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

நாட்டில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும்...

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...