மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியாவே குசலதம்ம தேரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!

Date:

மறைந்த மஹா நாயக தேரர் பேராசிரியர் வெலமிட்டியவே குசலதம்ம தேரருக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில் கொழும்பு ஸ்ரீ அத்போதி விஹாரையின் விகாராதிபதி கலாநிதி சாஸ்த்ரபதி கலகம தம்மரன்சி நாயக தேரர் மற்றும் தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சமய தலைவர் அல்-ஹாஜ் அஸ்-செய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி ஆகியோர் இன்று ( 30) களனிய வித்யாலங்கார பிரிவினவில் கலந்து கொண்டனர்.

இறுதி அஞ்சலியை முன்னிட்டு களனிய வித்தியாலங்கார பிரிவெனாவில்   வைக்கப்பட்டிருந்த மஹா நாயக்க தேரரின் மறைவு தொடர்பான அனுதாப புத்தகத்தில் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி உள்ளிட்ட அனைத்து மத பிரமுகர்களும் தங்களுடைய அனுதாபங்களை பதிவு செய்தனர்.பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பதிகாரியான ஹஸன் மெளலானா அவர்கள் இந்த அனுதாப புத்தகத்தில் முஸ்லிம் சமூகம் சார்பான அனுதாபத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Popular

More like this
Related

வடஇந்திய மாநிலங்களில் மஸ்ஜித்களின் தொடர் உடைப்புக்கு எதிராக திரளும் பெரும்பான்மை இந்துக்கள்.

-Azeez Luthfullah. வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர்...

இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற...

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...