நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய எதிர்வரும் ஆண்டு அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என விவசாயத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில் அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கண்டியில் நேற்று (25) ஊடகங்களுக்கு கருத்துரைத்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ குணரத்ன ,உரத்தட்டுப்பாடு காரணமாக பெரும்போக விளைச்சலை உரிய வகையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.