மாவனெல்லையில் போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டல் நிகழ்வு!

Date:

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை, மாவனல்லை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜமாஅத் வளாகத்தில் இடம்பெற்றதுடன் நிழ்வில் பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான அருட்தந்தை எஸ்.சி தொடவத்தை கலந்து கொண்டார்.

இதனிடையே, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக பிரிவிற்கு பொறுப்பான ஆர்.எம். ரத்னாயக்க, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் பிரதானி டி.எம்.எம்.சி. தஸனாயக்க, ரன்கொன்திவல கிராம சேவகர் ஏ.எஸ்.கே.அமரஸிங்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் போதைப் பொருள் பாவனை மற்றும் அதன் தீமைகள் பற்றின விழிப்புணர்வு உரையினை தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி எம்.எச்.எம் ஹசன் நிகழ்த்தினார்.

இதேவேளை போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்பூட்டலுக்காக வாகனங்கள் மற்றும் கடைகளில் ஒட்டுவதற்காக 1000 ஸ்டிக்கர்ஸ் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகள் வெளியீடு!

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...