ஜெனீவா பயணம் தொடர்பில் ஹரீன், மனுஷ, ரஞ்சன் ராமநாயக்கவுடன் சந்திப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சிறையில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று (11) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டிடம், ராமநாயக்கவின் விடுதலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டைக் கோரும் கடிதத்தை கையளித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சனை ராமநாயக்கவை விடுதலை செய்ய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு பச்சலெட்டை அந்தக் கடிதத்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வ​ரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...