பேக்கரி பொருட்கள் மற்றும், உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!

Date:

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினையடுத்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பன் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முன்னதாக, செரண்டிப் நிறுவனமும், பிரீமாவும் தங்கள் கோதுமை விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன.

1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவாலும் பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...