மாவனெல்லையில் போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டல் நிகழ்வு!

Date:

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை, மாவனல்லை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜமாஅத் வளாகத்தில் இடம்பெற்றதுடன் நிழ்வில் பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான அருட்தந்தை எஸ்.சி தொடவத்தை கலந்து கொண்டார்.

இதனிடையே, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக பிரிவிற்கு பொறுப்பான ஆர்.எம். ரத்னாயக்க, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் பிரதானி டி.எம்.எம்.சி. தஸனாயக்க, ரன்கொன்திவல கிராம சேவகர் ஏ.எஸ்.கே.அமரஸிங்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் போதைப் பொருள் பாவனை மற்றும் அதன் தீமைகள் பற்றின விழிப்புணர்வு உரையினை தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி எம்.எச்.எம் ஹசன் நிகழ்த்தினார்.

இதேவேளை போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்பூட்டலுக்காக வாகனங்கள் மற்றும் கடைகளில் ஒட்டுவதற்காக 1000 ஸ்டிக்கர்ஸ் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...