மாவனெல்லையில் போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்பூட்டல் நிகழ்வு!

Date:

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை, மாவனல்லை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் ஜமாஅத் வளாகத்தில் இடம்பெற்றதுடன் நிழ்வில் பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான அருட்தந்தை எஸ்.சி தொடவத்தை கலந்து கொண்டார்.

இதனிடையே, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக பிரிவிற்கு பொறுப்பான ஆர்.எம். ரத்னாயக்க, மாவனல்லை பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் பிரதானி டி.எம்.எம்.சி. தஸனாயக்க, ரன்கொன்திவல கிராம சேவகர் ஏ.எஸ்.கே.அமரஸிங்க ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த நிகழ்வில் போதைப் பொருள் பாவனை மற்றும் அதன் தீமைகள் பற்றின விழிப்புணர்வு உரையினை தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னாள் செயற்திட்ட அதிகாரி எம்.எச்.எம் ஹசன் நிகழ்த்தினார்.

இதேவேளை போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்பூட்டலுக்காக வாகனங்கள் மற்றும் கடைகளில் ஒட்டுவதற்காக 1000 ஸ்டிக்கர்ஸ் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளையினால் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...