ஊழல்வாதிகளை முன்னிறுத்த வேண்டாம்: மார்ச் 12 இயக்கம்

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நேர்மையான மற்றும் ஊழலற்றவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்கி சிறந்த நாட்டை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் மார்ச் 12 இயக்கம் இன்று வலியுறுத்தியுள்ளது.

மார்ச் 12 இயக்கத்தின் அழைப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம்  திகதி அரசியல் கட்சிகளால் வெளியிடப்பட்ட நிபந்தனைகளை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

வேட்புமனுவில் கையெழுத்திடும் போது அனைத்து வேட்பாளர்களும் தங்களது சொத்துப் பிரகடனத்தை சமர்ப்பிப்பதையும், அவற்றை வெளியிடுவதையும் அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

இளைஞர்கள் உட்பட சமூகத்தில் சமீபகாலமாக எழுந்துள்ள எழுச்சியானது நாட்டில் அமைப்பு மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக அவர் கூறினார்.

அரசியல் கட்சிகள் எதிர்பார்த்த மாற்றத்தை வழங்கும் வரை மக்கள் ஆவலுடன் காத்திருப்பதாக ஹெட்டியாராச்சி கூறினார்.

Popular

More like this
Related

மூத்த அரசியல்வாதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமாகியுள்ளார் சிறிது...

பங்களாதேஷில் ஆட்சியைக் கைப்பற்றியது கலீதா ஜியாவின் பி.என்.பி. கட்சி: பிரதமராகும் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன்...

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

பங்களாதேஷ் பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று ( 12) நடைபெற்றது. முன்னாள்...