மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் மருந்துகளை திருடி விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

Date:

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து விற்பனை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விசாரணையின் பின்னர், சம்பவம் தொடர்பாக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய நேற்று இரண்டு விசாரணைக் குழுக்கள் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தன.

சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் மஹரகம வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அருண ஜயசேகரவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இதன்படி நேற்று சுகாதார அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வைத்தியசாலைக்கு நன்கொடையாளரால் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்தை வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் 21,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்தபோது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் நேற்று  கைது செய்யப்பட்டார்.

இதன் பின்னர் குறித்த ஊழியரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ஒரு தொகை தடுப்பூசியும், ரூ. 4,25,290 பணமும் கைப்பற்றப்பட்டது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...