ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் இரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி கொண்ட பயங்கர விபத்தில் 300 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையில், “இந்திய மாநிலம் ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து வேதனையளிக்கிறது”
“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்; காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.