மாலைதீவு – இலங்கைக்கு இடையில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு!

Date:

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் மாலைதீவு குடியரசுக்கும் இடையிலான குற்றவியல் விடயங்களில் பரஸ்பர சட்ட ஒத்துழைப்புக்களை வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எனினும், மாலைதீவு தரப்பினர் ஒப்பந்த வரைபுக்கு பின்னர் ஒரு சில மேலதிக திருத்தங்களை முன்மொழிந்து, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் இருந்தனர்.

பின்னர் இருதரப்பின் உடன்பாடுகளுக்கமைய திருத்தப்பட்ட புதிய ஒப்பந்த வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது.

அதற்கமைய, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், பின்னர் ஒப்பந்தத்தை இருநாடுகளின் இராஜதந்திர தூதுக்குழுவால் ஏற்று அங்கீகரிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கையில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2024 செப்டம்பர் 21 அன்று தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்...

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்று மாநாடு:புதிய தலைமுறையைப் பாதுகாக்கவும் கட்டியெழுப்பவும் நபிகளாரின் வழிகாட்டல் அவசியம் என வலியுறுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்...

5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக பிரதமர் பூட்டான் பயணம்!

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை மற்றும் பலத்த காற்று...