நியூயார்க் மான்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை: தன்னைத்தானே சுட்டு கொலையாளியும் தற்கொலை!

Date:

நியூயார்க் மாகாணத்தில் பொலிஸ்  அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை அணிந்துவந்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் BMW காரில் வந்த ஒருவர் தனது கையில் M14 துப்பாக்கியுடன் வணிக வளாகத்துக்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகின.

ஒருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதாக மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்தார். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் நெவாடாவைச் சேர்ந்த ஷேன் டமுரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

வடஇந்திய மாநிலங்களில் மஸ்ஜித்களின் தொடர் உடைப்புக்கு எதிராக திரளும் பெரும்பான்மை இந்துக்கள்.

-Azeez Luthfullah. வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர்...

இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற...

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...