யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலமாக மீட்பு!

Date:

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டில்  அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த (52) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி (44) மற்றும் மகள் (17) ஆகியோர் மரணித்த நிலையில் வீட்டின் அறையொன்றினுள் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு வேளை முதல் இன்று அதிகாலை வரையான காலப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

இரட்டை நிலநடுக்கத்தால் வெனிசுவேலாவில் அவசர நிலை பிரகடனம்: உதவ அமெரிக்கா தயார் என டிரம்ப் அறிவிப்பு

வெனிசுவேலாவில் வெறும் 40 நொடிகள் இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 என்ற...

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை...

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவலைத் தடுக்க அவசர திட்டம்!

இலங்கையில் பாலியல் நோய்கள் மற்றும் HIV பரவல் நிலவரம் குறித்து ஆராய்ந்து,...

2026 தேசிய மீலாதுன் நபி விழா ஆகஸ்ட் 26ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில்…

2026 ஆம் ஆண்டு அரச அனுசரணையுடன் விமர்சையாக நடத்தப்படவுள்ள தேசிய மீலாதுன்...