இன்று நள்ளிரவு முதல் பாண் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!

Date:

இன்று (31) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவால் உயர்த்த தீர்மானித்துள்ளதாக அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய சங்கத்தின் தலைவர் எம். கே. ஜயவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கோதுமை மா இறக்குமதி நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 15 ரூபாவால் உயர்த்தியதைத் தொடர்ந்தே, பாணின் விலையை இவ்வாறு உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் நுகர்வோருக்கு அநீதி ஏற்படாத வகையில் நியாயமான முறையில் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

22க்கு எதிரான மனுக்கள் நாளை விசாரணைக்கு!

ஆளும்கட்சியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுது;தி தாக்கல்...

ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று...

உலகில் அதிக பொது விடுமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 3வது இடம்!

பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி,...

ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்!

கடந்த வாரம் நிலவிய ஐந்து நாள் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேகப்...