ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர அவர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்த்தப்பட்டுள்ளார்.

ஷானி அபேசேகர அவர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துமாறு நிர்வாக மேன்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு குறித்த உத்தரவு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கமைய ஓகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர அவர்களை பிரதிப் பொலிஸ் மா அதிபராக தரமுயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அவரது பணிநீக்கக் காலம் முதல் இதுவரை இழக்கப்பட்ட அனைத்து நிலுவைச் சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகளையும் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷானி அபேசேகர அவர்கள் கைது செய்யப்பட்டார்.

அவர் 11 மாத காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஷானி அபேசேகர அவர்களை பிணையில் விடுவித்தது.

2024 ஆம் ஆண்டு அவர் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதோடு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...

2026 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளது....

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...