மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய மேலும் 1901 நபர்கள் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.அங்கு இடம்பெற்ற சோதனையின் போதே இந்த எச்சரிக்கை பொலிஸாரினால் விடுக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில் 10,199 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன் போது, 9,793 பேர் நேற்று முன்தினம் (02) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அதில் ,4,121 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3,276 முச்சக்கர வண்டிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)