ஜெனீவா பயணம் தொடர்பில் ஹரீன், மனுஷ, ரஞ்சன் ராமநாயக்கவுடன் சந்திப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சிறையில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று (11) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டிடம், ராமநாயக்கவின் விடுதலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டைக் கோரும் கடிதத்தை கையளித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சனை ராமநாயக்கவை விடுதலை செய்ய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு பச்சலெட்டை அந்தக் கடிதத்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வ​ரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...