ஜெனீவா பயணம் தொடர்பில் ஹரீன், மனுஷ, ரஞ்சன் ராமநாயக்கவுடன் சந்திப்பு!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் சிறையில் இருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று (11) வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெறவுள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டிடம், ராமநாயக்கவின் விடுதலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தலையீட்டைக் கோரும் கடிதத்தை கையளித்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தற்போது 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சனை ராமநாயக்கவை விடுதலை செய்ய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் தலையிடுமாறு பச்சலெட்டை அந்தக் கடிதத்தில் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வ​ரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...