பேக்கரி பொருட்கள் மற்றும், உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!

Date:

கோதுமை மாவின் விலை அதிகரிப்பினையடுத்து பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய பாண் ஒன்றின் விலை 20-30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு பன் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று முன்னதாக, செரண்டிப் நிறுவனமும், பிரீமாவும் தங்கள் கோதுமை விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன.

1 கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவாலும் பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இதேவேளை, கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன் காரணமாக, இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...