நாடளாவிய ரீதியில் இன்றும் (29) சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L முதலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.
அத்துடன், P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களில், காலை 8.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரையான காலப்பகுதிக்குள் 5 மணிநேரமும், மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது.