மின்சாரம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அரச நிறுவனங்களுக்கு கோரிக்கை!

Date:

மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கமைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வேண்டுகோளின் பேரில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அதன்படி, குளிரூட்டிகள் மற்றும் தேவையற்ற விளக்குகள் நிறுவனங்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.

கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைப்பதற்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரத்னசிறி மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...