புத்தளம் வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு அத்தியாவசிய மருந்துகள் வழங்கி வைப்பு!

Date:

புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவுக்கு 1,40,000 பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய, புத்தளம் வைத்தியசாலை அபிவிருத்தி மன்ற செயலாளரும், முன்னாள் நகர சபையின் நிர்வாக அதிகாரியுமான சமூக ஆர்வலர் எச்.எம்.எம் சபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டன.

அதற்கமைய அகில இலங்கை Y.M.M.A அமைப்பின்  புத்தளம் மாவட்டப் பணிப்பாளரும் சமூக ஆர்வலருமான முஜாஹித் நிசார் தலைமையில் இந்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலையின் பிரதான மருந்தாளர் திருமதி மஜிதாவிடம் கையளிக்கப்பட்டன.

மேற்படி இந்த நன்கொடை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின்  பூரண அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...