‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்யும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை’

Date:

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை சித்திரவதை செய்ததாக நிரூபிக்கப்படும் மாணவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குற்றவாளிகளை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், அவர்களின் பட்டங்களை ரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும், அரசில் பணியாற்ற முடியாத வகையில் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பதற்றங்கள் காரணமாக கடந்த வருடம் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய 73 பேரை மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை சித்திரவதை செய்வது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்களே போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்திய மாணவர்களுக்கான சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த 11 மாணவர்களை தாக்கியமைக்காக கலைப் பீட மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...